share

Sunday, September 20, 2015

அதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தகம் !

ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புத்தங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம் இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது. நம்முடைய நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம்
பல இணையதளங்கள் பொருள்களை விற்றாலும் பாதுகாப்பான இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவது நல்லது. ‘https’ என்று ஆரம்பிக்கும் இணையதளம் பாதுகாப்பானவை. சில இணையதளங்கள் ‘http’ என்று ஆரம்பித்திருக்கும். அதுபோன்ற இணையதளங்களை தவிர்க்கவும். இதுபோன்ற இணையதளங்கள் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு அதிகம்.

வை-பை
அதேபோல பொது இடங்களிலோ அல்லது இலவசமாகக் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவது நமக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் அதனை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். இவை மூலமும் உங்களது தகவல்கள் திருடுபோகலாம். அதேபோல பயன்படுத்தும் கணிப்பொறியில் சரியான Anti Virus -யை பொறுத்தவும்.

கிரெடிட் கார்ட்
அனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும் ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்பதை மதிப்பிட முடியும். மேலும், குறைந்த தொகையாக இருக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தவும். ஒரு வேளை எதாவது தவறு நடக்கும்பட்சத்தில் குறைந்த நஷ்டம் ஏற்படும்.
அதேபோல ஆன்லைன் வர்த்தகத்துக்கு டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டையே பயன்படுத்தவும். டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது, சமயங்களில் ஆர்டர் முழுமையாகி இருக்காது, ஆனால் பணம் எடுக்கப்பட்டிருக்கும். சில நாட்களுக்குள் வங்கி கணக்கு வந்தாலும், உடனடி செலவுக்கு கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஆனால் கிரெடிட் கார்டில் இந்த பிரச்சினை கிடையாது.

கவனம் தேவை
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, நாம் எங்கேயும் அலையப் போவதில்லை, நம்முடைய நேரம் மிச்சமாகும், பணமும் மிச்சமாகும். மேலும், கார்டு மூலம் பணம் செலுத்துவதால் இவ்வளவு தொகையை செலவழிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பொருட்களை வாங்கிவிடுவோம்.
உளவியல் ரீதியாக பணத்தைக் கையால் தொட்டு புழங்கும்போது எச்சரிக்கையாக இருக்கும் நாம், கார்டு மூலம் செலவழிக்கும் போது அந்த கவனம் இருக்காது. இதனால் தேவையற்ற பொருட்களை அதிகமாக வாங்கிக் குவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தவிர மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை குறைந்த காலத்தில் மாற்றும் வாய்ப்பு இருப்பதால் சுயகட்டுப்பாடு தேவை. இல்லையெனில் ஒவ்வொரு மாதம் வரும் சம்பளத்தை கிரெடிட் கார்டுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும்.

விலை வேறுபாடுகள்
நிறைய இணையதளங்கள் வந்துவிட்டதால் விலைகளை ஒப்பிட்டு பார்த்து வாங்குவதன் மூலம் லாபம் கிடைக்கும். விலையை ஒப்பீடு செய்வதற்கு கூட சில இணையதளங்கள் இருக்கின்றன. அதுபோன்ற இணைய தளங்களுக்கு சென்று முடிவு செய்யலாம்.
சில இணையதளங்கள் கூரியர் கட்டணம் வசூலிப்பார்கள். சில நிறுவனங்கள் இலவசமாக டெலிவரி செய்வார்கள். அதனால் பொருட்களின் விலையை மட்டும் பார்க்காமல், மொத்தமாக எவ்வளவு செலவாகிறது என்பதை பொறுத்து எந்த இணையதளத்தில் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
வாரண்டி உள்ளிட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் நிபந்தனைகளை சரியாக படித்து பாருங்கள். அதாவது, கேஷ் ஆன் டெலிவரி, பொருளை திருப்ப அனுப்புவது, வாரண்டி உள்ளிட்ட விஷயங்களில் என்ன விதிமுறை, பொருட்கள் எப்போது கிடைக்கும் என்பது உள்ளிட்ட விஷயங்களை கவனிக்கவும். மேலும், ஆன்லைன் மூலம் வாங்கியவை சம்பந்தமாக ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

நன்றி :   thehindu.

Monday, September 14, 2015

ரெஸ்யூம் தயாரிப்பு சிறந்த டிப்ஸ் !



ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார். அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.
மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.


உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.
உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.
ரெஸ்யூம் எத்தனை பக்கம்
ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.


தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.


இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,
I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.


முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.


தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,
பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.
உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.
ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.
அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.
கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.


சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.
ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.


தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.


அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------
போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக,
My contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------
போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.


நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில், அதுவே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவற்றை குறிப்பிட தயங்க வேண்டாம். உதாரணமாக,
  • Being punctual
  • Creative
  • Caring for minute details
  • Reliable
  • Following systems and procedure
  • Efficiency minded
  • Cost conscious
  • Waste control
போன்றவற்றை சொல்லலாம்.


முதல் நிலை ஆய்வு

உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.
அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.


இதை செய்யாதீர்கள்

உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர்கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை, எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமில் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.
இன்றைய நிலையில், பணி வழங்குநர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதில்லை. உங்களின் பழைய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.


எழுத்துப் பிழை

ரெஸ்யூம் தயாரான பிறகு, அதை எழுத்துப் பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவது பலரின் வழக்கமான உள்ளது. ஆனால், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெனில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதேநேரத்தில், கணினியும் சில காரணங்களால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்புண்டு.
எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்து விடாமல், ஒரு வரி விடாமல் நீங்களே கவனமாக படிக்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில், மனித மூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டுமொத்த மதிப்பையே அது குலைத்துவிடும்.

சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..




http://www.msmedi-chennai.gov.in/MSME/எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.
யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.
சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு. சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.
மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.
இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்?

டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெறவேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து  உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்

எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.

வங்கிகளுடன் கூட்டு

சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும்  நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்

சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும். இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
எனவே, வேலை கிடைக்கவில்லை என்று ஏங்காமல், சுயதொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் ஆதாரமாக மாறுங்கள் இளைஞர்களே...
ஆதாரம் : தினமணி

Saturday, September 12, 2015

வங்கி சேமிப்பின் வகைகள் !

இந்கிய வங்கித்துறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மகக்ளின் தனிப்பட்ட தேவைகளுக்கு பல வகையான திட்டங்களை வழங்கி வருகின்றனர். வங்கிகளில் வழங்கும் சேமிப்புக் கணக்குகள் வாடிக்கையாளரின் வயது, வருமானம் மற்றும் பாலின அடிப்படையில் பல வங்கிகள் வெவ்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் இத்தகைய கணக்குள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம், ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றாகவே இருக்கும்.மேலும் இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் சில வகையான வங்கிக் கணக்கு வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன

மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு

பெயருக்கு ஏற்றார் போல் மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர் தேவைக்கேற்றார் போல 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கானது. இதில் பல்வேறு நன்மைகள் உள்ளது, அவை நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் (FD) பிரத்யேக வட்டி விகிதம், குறைவான கட்டணங்கள் ஆகியன அடங்கும்.

பெண்கள் சேமிப்பு கணக்கு

பல வங்கிகள் பெண்களின் பொருளாதார தேவை, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்காக பிரத்யேக வங்கிக் கணக்கை வடிவமைத்துள்ளனர். சில வங்கிகள் அதிக பண வரம்பு மற்றும் பணம் திரும்பப் பெரும் சலுகைகள் போன்றவற்றை வழங்குகின்றன.

சாதாரண சேமிப்பு கணக்கு

சாதாரண சேமிப்புக் கணக்கை யாரும் திறக்கலாம். சராசரியாக காலாண்டிற்கு குறைந்த பட்ச தொகையை வைப்பு வைக்க வேண்டும். தவறினால் தண்டனை பணம் வசூலிக்கப்படும். சாதாரண சேமிப்புக் கணக்கில் கணக்குப் புத்தகம், இணைய வங்கி வசதி, தொலைபேசி வங்கி வசதி, காசோலைப் புத்தகம் மற்றும் பற்று அட்டை போன்ற அம்சங்கள் உள்ளன.

கட்டணமில்லாத அடிப்படை வங்கிக் கணக்கு

இந்த வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்த பட்ச வைப்புத் தொகை வரம்பு கொண்டவர்கள் அல்லது வரம்பு அற்றவர்கள். பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்காக ரிசர்வ் வங்கியால் இந்த திட்டம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன அது வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன.

மாணவர் சேமிப்பு கணக்கு

சில வங்கிகள் மட்டுமே மாணவர் சேமிப்பு கணக்கு வசதியினை வழங்குகின்றன. இதில் குறைந்த பட்ச வைப்பு தொகை இருக்காது அல்லது மிகவும் குறைந்தபட்ச தொகை இருந்தால் போதுமானது.
என்.ஆர்.ஐ தொடர்பான கணக்குகள்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய வங்கி அமைப்பில் தனி இடம் உண்டு இவர்களுக்கு தரப்பட்ட வங்கி சேவைகள் வழங்கப்படுகிறது. இதில் சேமிப்பு கணக்குத் திட்டங்கள் உள்ளன. அவைகளை பற்றி பார்போம்.

என்.ஆர்.இ. சேமிப்பு கணக்கு

இந்த கணக்கில் ரூபாய் மதிப்பு வடிவில் பராமரிக்கப்படலாம். இக்கணக்கை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயர்களில் துவங்கலாம்.

என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கு

ரூபாய் மதிப்பு வடிவிலும், நடப்பு கணக்காகவும், சேமிப்பு கணக்காகவும், தொடர் கணக்காகவும், நிரந்தர வைப்பு கணக்காகவும் என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கில் துவங்கவும்/வைக்க முடியும். இந்தியாவில் குடியிருப்பவர்களுடன் கூட்டுக் கணக்காகவும் வைத்துக் கொள்ளலாம். என்.ஆர்.ஒ. கணக்கிற்கு வேறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யலாம், இந்தியாவில் வசிப்பவர்கள் கூட வெளிநாடு வாழ் இந்தியரின் என்.ஆர்.ஒ. கணக்கில் பணம் செலுத்தலாம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

Sunday, September 6, 2015

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!


இன்றைய கார்ப்ரேட் யுகத்தில், பல தனியார் நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும், உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவராக திகழ்கிறார்  சி.இ.ஓ., (Chief Executive Officer).

ரகசியம் அறியுங்கள்

இந்த பதவியை பிடிக்க இளைஞர்கள் பலருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால், பொறுப்புகள் நிறைந்த, அதிகாரங்கள் குவிந்து கிடக்கும் இப்பதவியை எப்படி அடைவது என்பதை அவர்கள் அறிவார்களா? குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு இதுகுறித்த போதுமான தெளிவு இருக்குமா என்பது சந்தேகமே.
இளம் வயதினரும் இந்த பொறுப்பை அடைய முடியும் என்பதற்கு ‘பேஸ்புக்’ சக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், முதல் எத்தனையோ பேர் உதாரணமாக திகழ்கின்றனர். இளம் வயதினரும் சி.இ.ஓ., ஆக முடியும். அதற்கு இங்கே எந்தவித பயிற்சியும் அளிக்கப்போவதில்லை. சில முக்கிய ரகசியத்தை மட்டுமே சொல்லப்போகிறோம். அவை:

சரியான சூழலை தேர்வு செய்யுங்கள்

பொருத்தமான சூழல் இல்லாத இடத்தை தேர்வு செய்ததாலேயே பலர் தங்களது உண்மையான திறன்களை வெளிக்கொணர முடியாமல் தவிக்கின்றனர். இளம் வயதிலேயே சி.இ.ஓ., ஆவதற்கான முதல்படி, சரியான சூழல் உள்ள நிறுவனத்தில் சேர்வது. அதாவது, வயதிற்கு மரியாதை அளிக்கும் இடம் அல்ல; உழைப்புக்கு மரியாதை கிடைக்கும் இடம்.
உங்களது சுய குறிக்கோள் மற்றும் மதிப்புக்கு ஏற்ப உங்களால் உண்மையாக செயல்பட முடியாத இடத்தில் சாதிப்பது மிக மிக கடினம். எனவே, உங்களது குறிக்கோளை அடைவதற்கு சாத்தியமுள்ள சூழலை தேர்வு செய்வது அவசியம்; மாறாக, உங்களது குறிக்கோள் என்ன என்பதையே மறந்து போகக்கூடிய சூழல் அல்ல.
இளம் சி.இ.ஓ., டேன்னி வாட்டர்ஸ் சொல்கிறார், “நீங்கள் செய்யும் எந்த வேலையையும் ரசித்து, மகிழ்ச்சியாக செய்வது மிக முக்கியம். அப்போது தான், வெற்றிக்கு அது உங்களை அழைத்துச் செல்லும்”.

‘ரிஸ்க்’ எடுக்க தயங்காதீர்கள்

இளம் வயதில் ‘ரிஸ்க்’ எடுப்பதில் பெரியளவில் எதையும் இழக்கப்போவதில்லை என்ற உண்மை நம்மில் பலர் அறிவதில்லை. ஆனால், எதிர்வரும் விளைவுகளை நினைத்து பயந்தே எந்தவித ‘ரிஸ்க்’ எடுக்கவும் தயங்குகிறோம். இளம் தனிநபர் எடுக்கும் எந்த பெரிய ‘ரிஸ்க்’கும் தோல்வியில் முடிந்தாலும், அதனால் பெரிய இழப்பில்லை. ஒருவேளை, விளைவுகள் அதிகமாக இருந்தாலும், அதுவும் ஒருவிதத்தில் நல்லதே.
“தோல்வியின் விளைவுகள் குறைவாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்கு எதையும் எதிர்த்துநிற்கும் திறன் வராது” என்கிறார் இளம் சி.இ.ஓ., ஜோனதன் சாமுவேல்ஸ்.

உங்களை பிறர் மதிக்க செய்யுங்கள்

முன்னேறி நீங்கள் மேலே மேலே செல்ல வேண்டுமானால், உங்களது முடிவுக்கு சக பணியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். வயதில் மூத்தவர்கள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இது மிகக் கடினமானதாக தோன்றலாம்.  எனவே, நீங்கள் செய்யும் வேலைக்கும், உங்களது திறமைக்கும் மதிப்பளிப்பவர்கள் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.
சாமுவேல்ஸ் மேலும் சொல்கிறார், “பிற நிறுவனங்களுடனான வணிக பேச்சுவார்த்தைகளின் போது உங்களது இளம் வயது எதிர்தரப்பினருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், எனது அனுபவத்தில் சொல்கிறேன்... என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து பேசும்போது, அவர்களது ஆச்சரியம் விரைவில் காணாமல்போய்விடும்”.


ஆதாரம்: தினமலர் கல்விமலர்

Tuesday, August 11, 2015

வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள் !


1- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
 
2- வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.
 
3- மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
 
4- கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
5- வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.
 
6- எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.
 
7- வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
 
8- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
 
9- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
10- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
 
11- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
 
12- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.

 
13- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
 
14- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
 
15- தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.



             { { { இணையங்களில் படித்ததை பகிர்கிறேம் } } }
 நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

Wednesday, August 5, 2015

புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களா ? அப்ப இத படிங்க.......

பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு நிறுவனத்தின் பணியாளராக தங்கள் வாழ்க்கையை தொடங்கி இருக்கும் சமயம் இது. பலருக்கு அந்த முதல் வேலையேகூட மொத்த வாழ்க்கையை
தீர்மானிக்கும் வாய்ப்பாக அமையலாம். எனவே, சிறப்பாக செயல்பட்டு, விரைவில் பணி உயர்வு கிடைத்து வாழ்கையில் செட்டில் ஆக வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பது நியாயமானதுதான். 
இந்த முயற்சியில் பலர் வேலைப்பளு காரணமாக ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகி சில நேரங்களில் வேலையே வேண்டாம் என்கிற நிலைக்கு தள்ளப்படுவதைப் பரவலாக பார்க்க முடிகிறது. இந்த ஸ்ட்ரெஸ்ஸுக்கு பலியாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 
1. உணவும் உறக்கமும்!
 கல்லூரி நாட்களில் உணவுக்கும் உறக்கத்துக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், வேலைக்கு வந்தபின் இரண்டும் கண்முன் இருக்கும். ஆனால், ப்ராஜெக்டை/வேலையை குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்கிற பயத்தில் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டு வேலையில் மூழ்கிப் போவோம். இது முற்றிலும் தவறு. உங்கள் உணவு மற்றும் உறக்கம் சரியாக இருந்தாலே ஸ்ட்ரெஸ் உங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது போலத்தான். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மனிதனுக்கு தேவையான  6 முதல் 7 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம். நிம்மதியாக தூங்கி எழுவது ஒரு நல்ல தியானத்துக்கு சமம் என்றுகூட நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அதேபோல் கல்லூரியில் படிக்கும்போது ஒரு சீரான உணவு முறையில்தான் நாம் சாப்பிட்டிருப்போம். வேலைக்கு வந்த உடன் அந்த சீரான உணவு முறையிலிருந்து மாறிவிட வாய்ப்புண்டு. பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகள் சாப்பிடுவது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், வாங்கும் சம்பளத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக காலையில் பட்டினி கிடப்பது, திடீரென ஒரு நாள் நண்பனின் ட்ரீட் என்றவுடன் வயிறு முட்ட சாப்பிடுவது என்று சகட்டுமேனிக்கு நம் உடலின் போக்கை மாற்றிவிடுகிறார்கள். இப்படி செய்வதால் நம் உடல் எப்படி சீராக இயங்குவது என்று தெரியாமல் திணறி, பின் ஏதாவது பெரிய நோயில் சென்று முடிகிறது. சரியான நேரத்தில் சீரான உணவு நம் உடலை சீராக இயங்கவைப்பது மட்டுமின்றி மனதையும் அமைதியாக வைத்திருக்கும்.

2. இஷ்டப்பட்டு வேலை செய்யுங்கள்!
உங்கள் அலுவலக வேலையை நீங்கள் கஷ்டப்பட்டு செய்வதைவிட இஷ்டப்பட்டு செய்யுங்கள். ஸ்ட்ரஸ் என்பது உங்களை எட்டிக்கூட பார்க்காது. அப்படியும் அலுவலக வேலை கொஞ்சம் போராடித்தால் அல்லது லேசான பரபரப்பை உருவாக்கினால், சில நிமிடங்கள் மனதை வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதற்கு எளிய வழி, உங்களுக்கு பிடித்தவர்களுடன் சில நிமிஷம் பேசுவது அல்லது உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது அல்லது காலார ஒரு பூங்காவில் சிறிது நேரம் நடப்பது. இப்படி செய்வதால் மனமும் உற்சாகம் அடையும். மீண்டும் சுறுசுறுப்பாக வேலையைப் பார்க்கத் தொடங்கலாம்.  
3. ஓய்வு நேரங்களில் ஸ்மார்ட் போன் வேண்டாமே!
நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேரம் உழைத்திருப்பீர்கள். ஆனால், பணிக்கு சேர்த்தவுடன் உங்கள் வேலை நேரம் திடீரென இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த மாதிரியான சமயங்களில் கல்லூரியில் இருந்ததை போல ஸ்மார்ட் போனில் வாட்ஸப், ஃபேஸ்புக் என்று நம் எனர்ஜியை செலவழிக்காமல், அந்த ஓய்வு நேரத்தில் உங்கள் எனர்ஜியை அதிகப்படுத்தும் செயல்களை செய்யுங்கள். இது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும்.

4. புழம்புவதைவிட செயல்படுங்கள்!
உங்களுக்கு அதிக வேலை கொடுத்துவிட்டார்கள் என்று புழம்புவதைவிட, அந்த வேலையை எப்படி முடிப்பது என்று திட்டமிடுங்கள். உங்களுக்கு தரப்பட்ட வேலையை உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியவில்லை எனில் உங்கள் குழுவில் உள்ள சீனியர்களிடம் எப்படி அந்த வேலையை சரியாக, குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது என்று கேட்டு அறிந்துகொள்ளுங்கள். இது சீனியர்களிடம் நல்ல உறவை தக்க வைத்துக் கொள்ளவும், குழுத் தலைவரிடம் நல்ல பெயரை வாங்கவும் உதவும்.
5. அலுவலக நேரத்தை திட்டமிடுங்கள்!
 பொதுவாக, நேரம் திட்டமிடல் என்ற உடன் காலை 5.30 மணிக்கு எழுவது, 6 மணிக்குள் குளித்துவிட்டு, 6.15 ரயில் பிடிக்க வேண்டும் என்று வழக்கம் போல் திட்டமிடுவதைவிட, வேலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முழுமையாக திட்டமிடுங்கள். அலுவலகத்திற்குள் நுழைந்த உடன் கோப்புகளை பிரிப்பது, இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுவது, நாளைக்கு தள்ளிப் போடக்கூடிய பணிகளை ஒதுக்குவது, நேற்று செய்த பணிகளை நம் மேலதிகாரிகளிடம் சமர்பிப்பது, நேற்றைக்கு முதல் நாள் செய்த பணிகளில் ஏதாவது தவறுகள் இருந்து குறிப்பிடப்பட்டிருந்தால் அவைகளை திருத்துவது என்று பணிகளை வரிசையாக பட்டியலிட்டுக் கொள்வது உங்களை ஸ்மார்ட்வொர்கராக மாற்றும்.
6. நண்பர்களுடன் நட்பு பாராட்டுங்கள்!
 நல்ல நண்பர்களுடன் பேசுவது ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபட ஒரு சிறந்த வழி. வேலைக்கு நம் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு வந்தபின் நாம் தனிமையில் இருப்பதை உணர்வோம். இந்தத் தனிமை அலுவலகத்தில் உருவாகும் சின்னப் பிரச்னையைக்கூட பூதாகரமாக்கிக் காட்டும். இந்தத் தனிமையிலிருந்து சிறந்த வழி, நல்ல நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதே. புது இடம், புது சூழ்நிலை, புது கலாச்சாரம் என்று இருந்தாலும், அலுவலகத்தில் சிலரையாவது நல்ல நண்பர்களாக மாற்றிக் கொள்ளுங்கள். நமக்கு முன்பே அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதால், ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும், எந்த மாதிரி செய்தால் வேலை விரைவில் முடிவடையும், எந்த முறையில் செய்தால் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று அவர்கள் நமக்கு வழி காட்டுவார்கள்.
7. எமோஷனல் ஃபூல்களாக இருக்காதீர்கள்!
கல்லூரியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மீது கோபம் வந்தாலோ அல்லது அனைவர் முன்பும் நம்மை திட்டிவிட்டாலோ, வகுப்பை கட் செய்து வெளியே சுற்றலாம். ஆனால், அலுவலகம் பிடிக்கவில்லை என்று அடிக்கடி விடுமுறை எடுத்தால், நம் சம்பளம் கழிவதுடன், உயரதிகாரியிடம் நம் பெயரும் கெட்டுப் போகும். இது நம் வளர்ச்சிக்கே எதிராக அமையும். 
8. யோகாவும் தியானமும் நிம்மதி தருமா? 
நமக்கு கோபம் வந்தாலும், அந்த கோபத்தை சரியாக நிர்வகிக்கத் தெரிய வேண்டும். அப்படி செய்ய கொஞ்சம் யோகாவும், தியானமும் செய்து பார்ப்பது அவசியம். 
உங்கள் உடலும் உள்ளமும் சிறப்பாக இருந்தால், உங்கள் மனம் பரபரப்பு அடையாது. இதனால் உங்கள் வேலையை எப்போதும் உற்சாகமாக செய்யலாம்! 


       
           { { { இணையங்களில் படித்ததை பகிர்கிறேம் } } }
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

நன்றி !
http://www.vikatan.com/personalfinance/

Saturday, August 1, 2015

தொழிலில் பணப் பிரச்னையை சமாளிக்க பக்கா வழிகள் !

புதிய தொழில் ஆரம்பிக்க தேவைப்படும் நிதிக்கான வழிகள் குறித்து   பார்க்கலாம்...

காத்திருக்கும் வங்கிகள் !
புதிதாக சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய விரும்புகி றவர்கள் பணத்திற்கு எங்கே போவது என்று கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தனிப்பட்ட நிதி நிறுவனங்களும் தொழிற்கடன் தருவதற்கு தயாராகவே இருக்கின்றன. நம்பிக்கையோடு புறப்படுங்கள். வெற்றி நிச்சயம்!

நீங்கள் யார்?
தொழிற்கடனைப் பெறுவதற்கு முன், நீங்கள் யார் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை வைத்து மூன்று விதமாகப் பிரித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்கள் குறுந் தொழில்கள் (மைக்ரோ) எனவும், 25 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வரைக்குமான தொழில்களை சிறு தொழில்கள் (ஸ்மால்) எனவும் 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்க்குள் நடக்கும் தொழில்களை நடுத்தர தொழில்கள் (மீடியம்) என பிரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புதிதாக தொடங்கப் போகும் தொழில் இந்த மூன்று வகையில் எதில் அடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கான கடனை எங்கு பெறுவது என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரச்னை இருக்காது.

வங்கியே சிறந்தது!
சிறு தொழில்களுக்கான கடனை தர வங்கிகள் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இதில் வங்கிக் கடன்தான் சிறந்தது என்பது அனுபவசாலிகளின் முடிவு. இதற்கு முக்கிய காரணம், வட்டி. பொதுவாக, பொதுத் துறை வங்கிகள் அளிக்கும் தொழிற்கடனுக்கு 13 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. ஆனால், அரசு சாராத தொழில் வங்கிகள் ஓரளவுக்கு தாராளமாகவே கடன் தந்தாலும், அதற்காக வசூலிக்கும் வட்டி விகிதமும் அதிகமே. தனியார் வங்கிகள் 13 முதல் 15% வரை வட்டி விதிக்கின்றன.
இதுவாவது பரவாயில்லை, சில தனியார் நிதி நிறுவனங் களும் சிறு தொழில்களுக்கான கடனைத் தருகின்றன. இந்த கடனுக்கு அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தைக் கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டி (கிட்டத்தட்ட 60 சதவிகிதம்!) இதைக் கொள்ளை வட்டி என்றுதான் சொல்ல வேண்டும். தப்பித் தவறி இந்த கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குண்டுகட்டாக நம்மை தூக்கிக் கொண்டு போய் கிட்னியை எடுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குறித்த காலக் கடன்!
புதிதாக தொழில் தொடங்குபவர்களாக இருக்கட்டும், ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களாக இருக்கட்டும், வங்கிகள் அளிக்கும் குறித்த காலக் கடன் என்கிற இந்த டேர்ம் லோனை தாராளமாக வாங்கலாம். மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை குறுகிய காலக் கடன் என்றும், ஏழு ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை நடுத்தர காலக் கடன் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் திரும்பச் செலுத்தும் கடனை நீண்ட கால கடன் என்றும் சொல்லப் படுகிறது.
இந்த டேர்ம் லோனை பெற உங்களிடம் சொத்து இருக்க வேண்டும். தவிர, இருவர் உங்களுக்கு ஜாமீனும் தரவேண்டும். தொழிலுக்கான முழுப் பணமும் உங்களுக்கு கடனாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களிடமும் 10 முதல் 25% தொகை இருக்க வேண்டும். புதிதாக ஆரம்பிக்கும் தொழிலில் உங்கள் முதலீடு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே தொழில் நடத்துவதில் உங்களுக்கு அக்கறை இருக்கும் என வங்கிகள் நினைப்பதால்தான் அவை இதை எதிர்பார்க்கின்றன.

நடைமுறை மூலதன கடன் !
வங்கி பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'வொர்க்கிங் கேபிட்டல்’. இந்த வொர்க்கிங் கேபிட்டல் இருந்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். 'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ என்று சொல்லப்படும் இந்த நடைமுறை மூலதனக் கடனை வங்கிகளிலிருந்து இரண்டு விதமாகப் பெறலாம். ஒன்று, ஹைப்பாத்திகேஷன் என்று அழைக்கப்படுவது. இந்த முறையில் வங்கி மூலப் பொருளுக்கு கடன் கொடுக்கும். இந்த பொருளை பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் கடன் கிடைக்கும்.
வங்கி தரும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் வங்கியே அதை ஒரு குடோனில் அடைத்து வைத்து, தேவைப்படுகிறபோது நாம் பணம் கொடுத்தால் வங்கி எடுத்துத் தரும். இதன் மூலம் ஒரே சமயத்தில் நாம் மொத்த மூலப் பொருளுக்கும் பணம் திரட்ட வேண்டியதில்லை.
'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ லோன் பெற சொத்தை காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
25 லட்ச ரூபாய் வரையிலான வொர்க்கிங் கேபிட்டல் கடனை பெற எந்த வகையான சொத்தையும் வங்கிகள் அடமானமாக கேட்கக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை. காரணம், சொத்து ஏதும் பெறாமல் கொடுத்த கடன் திரும்ப வராததே இதற்கு காரணம்.

வென்ச்சர் கேபிட்டல் !
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.
பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.
ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.
வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.
மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்! 


இதெல்லாம் இருக்கிறதா ?
  தொழிற்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது இதெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார் கேபிட்டல் மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.
* புராஜெக்ட் ரிப்போர்ட் கட்டாயம் தேவை !
நீங்கள் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? மூலப் பொருளை எங்கு வாங்குவீர்கள்? உற்பத்தியான பொருளை எங்கே விற்பீர்கள்? என்கிற மாதிரியான கம்ப்ளீட் ரிப்போர்ட்தான் இந்த புராஜெக்ட் ரிப்போர்ட். இந்த ரிப்போர்ட் இல்லாதவர்களிடம் வங்கி அதிகாரிகள் ஒன்றிரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார்கள்.
* 20 - 25% முதலீடு தேவை !
நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கான முழு முதலீட்டையும் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் பங்களிப்பாக 20 - 25% முதலீடு கட்டாயம் இருக்க வேண்டும். இது பணமாகவும் இருக்கலாம்; உங்கள் தொழிலுக்குத் தேவையான ஒரு இயந்திரத்தை வாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது அட்வான்ஸ் தந்திருக்கலாம்; மூலப் பொருளாக வாங்கி வைத்திருக்கலாம்.
* சொத்து, ஜாமீன் தேவை !
வங்கி உங்களுக்கு அளிக்கும் கடனுக்கு ஈடான ஒரு சொத்தையும் ஜாமீனையும் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. பெரிய அளவில் சொத்தோ, ஜாமீனோ கொடுக்க இயலாதவர்கள் வங்கியிடம் கடன் கேட்காமல் இருப்பதே நல்லது.
* அத்தனையும் அறிந்தவராக இருங்கள் !
நீங்கள் தொடங்கப் போகும் தொழில் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக இருங்கள். வங்கி உங்களுக்கு கடனுதவி மட்டுமே செய்யும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை சமாளிக்க வங்கி எந்த விதத்திலும் உதவாது என்பதை மறக்காதீர்கள்.


Saturday, July 25, 2015

சோப் ஆயிலில் சூப்பர் லாபம் !


வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம்.
பயிற்சிக்கு
பல்வேறு கிளீனிங் பவுடர், ஆயில்கள் தயாரிப்பு குறித்து மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் சேவை மையங்கள், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சியும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறு தொழில்கள்'s photo.தயாரிப்பது எப்படி?
ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2 லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.
இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100 கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி, சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ, வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம், வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.

சந்தை வாய்ப்பு :
ஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்கு நேரில் விற்கலாம். இதன் மூலம் தினசரி 50 லிட்டர் எளிதில் விற்று விடலாம். சோப் ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களை விட பல மடங்கு விலை குறைவாகவும், பிராண்டட் சோப் ஆயில்களை போல் தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர் வாங்குகிறார்கள்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான சோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்ப உற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு பினாயில், சோப் பவுடர், சொட்டு நீலம், கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்தால் லாபம் அதிகரிக்கும்.


என்னென்ன தேவை ?
சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட், பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள், ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.
 
தளவாட சாமான்கள் :
50 லிட்டர் கேன் 1, 25 லிட்டர் பிளாஸ்டிக் வாளி 1, 20 லிட்டர் வாளி 3, மக் 2, தண்ணீர் வடிகட்டி 1, சில்வர் கரண்டி, புனல் 1, பாட்டில் கழுவும் பிரஷ் 1, மற்றும் 2, 5 லிட்டர் காலி பாட்டில்கள், கேன்கள்.
 
உற்பத்தி செலவு :
சிலரி ஒரு கிலோ ரூ.120, காஸ்டிக் சோடா 100 கிராம் ரூ.4, சோடா ஆஷ் ஒரு கிலோ ரூ.30, யூரியா ஒன்றரை கிலோ ரூ.12, ஒலிக் ஆசிட் 100 கிராம் ரூ.10, பெர்ப்யூம் 15 மில்லி ரூ.25, லேபிள் 200 ரூ.10, காலி பாட்டில்கள் ரூ.10 என ரூ.221 செலவாகும். இதர செலவுகள் உட்பட 10 லிட்டர் தயாரிக்க ரூ.230 வரை செலவாகும்.
  (கவனிக்கவும் : தற்போதய உள்ளூர் நிலவரப்படி விலைகள் மாறலாம்)
வருவாய் :
ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.23 செலவாகிறது. அதை உள்ளூரில் ரூ.35க்கும், வெளியூர்களில் ரூ.45க்கும் விற்கலாம். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு லாபம் ரூ.12க்கு குறையாமல் கிடைக்கிறது. ஒரு நாளில் 50 லிட்டர் வரை தயாரிக்கலாம் என்பதால் ரூ.12 வீதம் 50 லிட்டருக்கு ரூ.600 லாபம் கிடைக்கும். மாதம் 25 நாள் வேலை செய்தால் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விற்கும்போது போக்குவரத்து செலவு ஏற்படும். ஆனால் லாபம் அதிகமாக இருக்கும்.

Tuesday, June 30, 2015

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! திருப்பூர்.(மின்னணு எடைதராசு )

உலகத்தையே தரமான பணியன் தொழில் மூலம் திரும்பி பார்க்க வைத்த திருப்பூரில் எலெக்ட்ரானிக் தராசுகள், குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் மேடை தராசுகள், மேஜை தராசுகள், எடை தராசுகள் தயாரித்து விற்கபடுகிறது.


மேலும் ஆட்டு பண்ணைஆடு வளர்போர், பண்ணை ஆடுகள் 
மற்றும் அணைத்து விதமான கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், விலங்குகள். செல்ல பிராணிகளுக்கு தேவையான எடை பார்க்கும் கருவிகள், எடைதராசுகள்  போன்றவற்றை  சிறந்த முறையில்  

பிரத்தேயேகமாக தயாரிக்கப்பட்ட எடைதராசுகள்  திருப்பூரில் கிடைப்பது தனி சிறப்பாகும்.
  முக்கியமாக ஆடு எடைதராசு

இன்றைய வியாபார உலகில், ஆடு வளர்ப்பு, பண்ணை ஆடுகள் போன்றைவை முக்கிய  இடமாக வளர்ச்சி பாதையில் உள்ளது. ரியல் எஸ்டேட் போன்று  இன்று  பலறும் இலாபம்   ஈட்டும் வகையில் இவற்றில்   ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஆட்டின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகிவற்றை கண்காணிக்கவும், ஆடுகளை வாங்க, விற்க முற்படும்போது அதன் துள்ளிய எடையளவை தெரிந்துகொள்ள எடைதராசு மிகவும்  முக்கியும் அதற்க்காக பிரதேயேகமாக  பல வடிவில், எண்ணற்ற அளவில், சிறந்த முறையில், நல்ல தரத்தில், துள்ளிய எடையளவை கண்காணிக்கும் எடைதராசை நமக்கு தேவையான அளவுகளில் தயாரித்து வழங்கபடுகிறது...
 ஆடு எடைதராசு அளவு : 900 * 1100 mm
 எடையளவு : 300 கிலோ
 துள்ளியம் : 100 கிராம்

  சிறப்பம்சம் :
 * MS - கணமான எடைமேடை
 * ஆடுகளுக்கு நிற்க  வசதியாக நாலாபுற கூண்டு வடிவமைப்பு
 * நீடித்து உழைக்கும் திறன்
 * 1 வருட உத்திரவாதம்.
 * இலவச இன்ஷ்டலேசன் (Installation) மற்றும் டோர் டெலிவரி (Door Delivery)
  


 மேலும் விபரம் அறிய :
 தொடர்புக்கு : உமா டெக் ஸ்கேல்ஸ், +91-8220572205
Related Posts Plugin for WordPress, Blogger...