share

Sunday, March 29, 2015

பேஸ்புக் வீடியோக்களை விரும்பிய தரத்தில் தரவிறக்கம் செய்வது எப்படி ?


பேஸ்புக் வீடியோக்களை விரும்பிய தரத்தில் தரவிறக்கம் செய்வது எப்படி ? 

http://adf.ly/1CI2fh

பேஸ்புக் இணையத் தளம் பற்றி பெரிதாக ஒன்னும் சொல்ல தேவை இல்லை இன்ரநெற் பாவிப்பவர்களில் பலர் பேஸ்புக் பாவிக்கின்றார்கள் என்ற காலம் மறைந்துபோய் இப்போ facebook பாவிப்பதற்கு தான்பலர் இன்ரநெற் பயன்படுத்துகின்றார்கள் என்று காலம் மாறிவிட்டது

நம்மை சிரிக்க சிந்திக்க வைத்த facebook வீடியோக்களை நம்மால் தரவிறக்க முடியவில்லை என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கலாம் இதனை சில மென்பொருள் துணையோடு செய்ய முடிந்தாலும் மென்பொருள் இல்லாமலே தரவிறக்க உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு

இணையத்தள முகவரி#

இந்த இணையத்தளத்தில் சென்று தரவிறக்க வேண்டிய பேஸ்புக் விடியோவின் லிங்க் கொடுத்து டவுன்லோட் என்று அழுத்துவதர்ர்க்கு முன் விரும்பிய தரத்தை தெரிவு செய்ய வேண்டும் பின் Download this video என்றதை கொடுத்தவுடன் வீடியோவை நீங்கள் பார்க்க முடியும் அந்த வீடியோவில்
 Right click and save as செய்யவும்

Facebookல் Group உருவாக்குவது எப்படி?

Facebookல் Group உருவாக்குவது எப்படி?


Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம்.  எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்
  • முதலில் http://www.facebook.com/login.php சென்று  facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.
Group Name – குழுமத்தின் பெயர்
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open - இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed - இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret- உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

Saturday, March 28, 2015

பணம் சம்பாதிக்க 12 வழிகள்

 
வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களா நீங்கள்?
உங்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. ஆனால் அவை உங்களுக்கே தெரிவதில்லை என்பது தான் உண்மை. கீழ்க்கண்ட விஷயங்களில் உங்களுக்கு ஆர்வமும், திறமையும் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்.
* உங்களுக்கு தையல் வேலையோ, எம்பிராய்டரிங்கோ தெரியுமா? பொம்மை செய்வது, ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது என்று ஏதேனும் தெரியுமா? அதையே மூலதனமாக வைத்து நீங்கள் ஏதேனும் சம்பாதிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த வர்களிடம் உங்கள் கைவினைத் திறமை களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்தவற்றை அவர்களுக்கு மாதிரிக்குக் காட்டுங்கள். கொஞ்ச நாட் களில் அவற்றை மலிவு விலைக்கு விற்றுப் பாருங்கள். பிறகு அப்படியே வியாபாரத்தைப் பெருக்கலாம்.
* உங்களுக்கு டைப் ரைட்டிங் தெரியுமா? கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்குத் தெரிந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டைப் ரைட்டிங் வேலைகளைச் செய்து கொடுங்கள்.

* நீங்கள் வீட்டு விலங்குப் பிரியரா? அப்படியானால் கொஞ்சம் இட வசதிக்கு ஏற்பாடு செய்து விட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தலாம். அதில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளை, அவர்கள் ஊருக்குச் செல்லும்போதும், மற்ற தேவையான சந்தர்ப்பங்களிலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம்.
* மெஹந்தி வரைவதில் நீங்கள் கில்லாடியா? உங்கள் வீட்டு வாசலில் ஒரு போர்டு வைத்து விடுங்கள். கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு மெஹந்தி டிசைன் போட்டு விடலாம். வீட்டிலேயே அதற்கான வகுப்பையும் எடுக்கலாம்.
* சாக்லேட், கேக், பிஸ்கட் போன்ற வற்றைத் தயாரிப்பதில் நீங்கள் நிபுணியா? பண்டிகை நாட்களுக்கு, பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என ஆர்டர் எடுத்து அவற்றைச் செய்து விற்கலாம். அருகிலுள்ள பேக்கரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்கலாம்.
* குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இட வசதி இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தலாம். உதவிக்கு ஒன்றிரண்டு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.
* உங்கள் வீட்டில் தோட்டம் போடுகிற அளவுக்கு இட வசதி உண்டா? மொட்டை மாடியாக இருந்தாலும் பரவாயில்லை. காய்கறித் தோட்டம் போடுங்கள். தினசரி சில மணி நேரத்தை அதைப் பராமரிப்பதில் செலவிடுங்கள். உங்கள் வீட்டுக்கான காய்கறிச் செலவை மிச்சப்படுத்தலாம். நீங்களே பயிரிட்ட காய்களை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.

* உங்களுடையது பெரிய வீடா? உபயோகிக்க ஆளில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டை சினிமா மற்றும் டி.வி படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடலாம். தினசரி வாடகை கிடைக்கும்.
* நல்ல குரல் வளம் உள்ளவரா நீங்கள்? பாடகியாகும் அளவுக்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை. படங்களுக்கு, விளம்பரங்களுக்கு, டி.வி தொடர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம். விளம்பர நிறுவனங்களுடன், டி.வி தொடர் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
* எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள வராக இருந்தால் உங்களைக் கவர்கின்ற செய்திகளை, சுவாரசியமாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்.
* படித்த படிப்பு வீணாகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாமே? உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப குறிப்பிட்ட வகுப்புகள் வரை கற்றுத் தரலாம்.
* டெய்லரிங் தெரிந்திருந்தால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்குத் துணிகள் தைத்துக் கொடுக்கலாம். பெரியளவில் தைக்கத் தெரியாவிட்டாலும் கூட மேல் தையல் போட்டுக் கொடுப்பது, ஓரம் அடித்துக் கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து தரலாம்.

மொத்தமாக சுடிதார் வாங்க,மணப்பாறைக்கு வாங்க!

மொத்தமாக சுடிதார் வாங்க,மணப்பாறைக்கு வாங்க!


   காலத்திற்கேற்ற நாகரிக உடை… எளிதில் அணிந்துகொள்ளும் வசதி… என பல சிறப்புகள் இருப்பதால் இன்றைய இளம் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ்-ஆக இருக்கிறது சுடிதார். திருமணமான பெண்களிடமும் புடவைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடித்துவிட்டது சுடிதார். இந்த மாடர்ன் உடையை நல்ல தரத்தில், பட்ஜெட் விலையில் வாங்க புத்தாநத்தம் சிறந்த தேர்வாக இருக்கும்.
மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊர். இந்த ஊரில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான மொத்த மற்றும் சில்லறை வியாபாரக் கடைகளிலும் சுடிதார் மட்டுமல்லாமல் மிடி, பிராக், நைட்டி, பெட்டிகோட், பாபாசூட் என அனைத்தும் உற்பத்தி செய்து விற்கின்றனர். பள்ளி, கல்லூரி சீருடைகளை மொத்தமாக இங்கு ஆர்டர் கொடுத்தும் வாங்கிச் செல்கின்றனர். இதுபற்றி தனியார் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
‘மும்பை, சூரத், அஹமதாபாத் போன்ற ஊர்களில் இருந்து நாங்கள் துணிகளை வாங்குவதால் மிகக் குறைந்த விலையில் எங்களால் சுடிதார்களைத் தயாரிக்க முடிகிறது. தவிர, இந்த ஊரைச் சுற்றி டெய்லரிங் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பதால், முழு நேரமாக ஆட்களை வேலைக்கு அமர்த்தி தைக்கிறோம். எனவேதான், மற்ற இடங்களைவிட குறைவான விலையில், தரமாக எங்களால் பல வகையான ஆடைகளைத் தயாரித்து விற்க முடிகிறது. சோலிமிடி, ரங்கீலா, பட்டியாலா, மசாக்கலி என எல்லாவகையான மாடல் சுடிதார்களும் இங்கு கிடைக்கும். இங்கு சுடிதார், நைட்டி, மிடி, பாபாசூட், பெட்டிகோட் என எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறோம். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பிராண்ட் பெயரில் சுடிதார்களை தயார் செய்கின்றார்கள்.
இங்கு நார்மல் சுடிதார்கள் ரூபாய் 160-லும் கல்வேலைபாடுகள், எம்பிராய்டரிங் ஒர்க்ஸ் என அதிக வேலைபாடுகள்கொண்ட சுடிதார்கள் அதிகபட்சம் ரூபாய் 2,500-க்கும் கொடுக்கிறோம். ஒன்றிரண்டு என்கிற எண்ணிக்கையில் வாங்கும்போது மொத்தமாக வாங்குவதைவிட 15% விலை அதிகமாக விற்கிறோம். இங்கிருந்து வாங்கிச்செல்லும் சுடிதார்களை 40 சதவிகிதத்திற்கு அதிகமாக விலை வைத்து விற்க முடிகிறது.
இங்கு நைட்டிகளும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூபாய் 70-ல் இருந்தே நைட்டிகள் கிடைக்கின்றன. இங்கு நீங்கள் மொத்தமாக ஆர்டர் தந்து வாங்கும்போது நீங்கள் விரும்பும் டிசைன்களில், நீங்களே தேர்வு செய்யும் துணியின் கலர்களிலும் சுடிதார்களை தைத்து தருகிறோம்.
எந்த ஒரு பொருளும் அதை உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கும்போது மற்ற இடங்களைக் காட்டிலும் விலை குறைவாகவே கிடைக்கும். அதற்கு ஏஜென்டுகள், போக்குவரத்து, விளம்பரம் என பல செலவுகளை தவிர்க்க முடிவதே காரணம். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஆடைகளை அனுப்புகிறோம்” என்றார்.
இங்கு காட்டன், சிந்தடிக் என எல்லா வகையான மெட்டீரியல்களிலும், குளிர்காலங்கள், கோடைகாலங்கள் என எல்லா வகையான காலநிலைகளிலும் அணியக்கூடிய சுடிதார்களும் லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கிறது. அடுத்த முறை மணப்பாறை வரை செல்கிறீர்கள் எனில், புத்தாநத்தத்துக்கும் ஒரு விசிட் அடித்து, சுடிதார்களை அள்ளிக்கொண்டு வரலாமே!

Sunday, March 1, 2015

முதலீடில்லாமல் செய்யும் இணையதள வேலைகள்


முதலீடில்லாமல் செய்யும் இணையதள வேலைகள்
வீட்டிலிருந்தே தினம் ரூபாய் ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க!

பணம் பணம் எதற்கெடுத்தாலும் பணம். அந்த பணத்தை நிறைவாக சம்பாதிக்கவே நாம் வேலைக்கு செல்கிறோம். ஆனாலும், பணப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறை பணத்தினை சம்பாதிக்கவே இணைய வேலையை வீட்டிலிருந்தபடியே பார்ட் டைமாக செய்ய விரும்புகிறோம், அதில் கை நிறைய பணமும் சம்பாதிக்கலாம். மேலும், இணைய வேலை என்பதனால் சவுகரியமும் அதிகம். பெண்களுக்கும் வேலைக்குச் செல்வோர்க்கும் என இல்லாமல் அனைவருக்கும் உகந்த பணி ஆன்லைன் ஜாப். அதுவும் House wife மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உகந்தது ஆன்லைன் ஜாப்.

இணையதளத்தில் பல்வேறு பணிகள் முதலீடு செய்யாமல் செய்து சம்பாதிக்கமுடியும்.

அவற்றில் பெரும்பாலான பணிகளுக்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் ஒரு தனி கணிணி மற்றும் தனி இணைய இணைப்பு வேண்டும்.

இந்த வேலைகள் அனைத்தும் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், அப்பொழுதுதான் அதன்மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை எளிதில் அடைய முடியும்.

இதனால் ஒருவரே ஒரு நிறுவனத்தில் பல கணக்குகளை வைத்து ஏமாற்ற நேரிடும் என்பதால் ஒரு கணிணி மற்றும் ஒரு இணைய இணைப்புக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மீறி நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கினை ஒரே கணிணி மற்றும் ஒரே இணைப்பில் வைத்தீர்கள் எனில் உங்கள் இணையத்திற்கென உள்ள எண்ணான IP ADDRESS மற்றும் கணிணியில் உள்ள SYSTEM FILES ஆகியவற்றை வைத்து அவர்கள் உங்களுடைய அனைத்து கணக்குகளையும் நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.

ஆகவே நீங்கள் நேர்மையான முறையில் வேலை செய்தால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.

ஆன்லைன் ஜாப் பணியின் சிறப்பு:

1.    நமக்கென்ற ஒர் முதலாளி கிடையாது, செய்யும் பணிக்கு நாமே முதலாளி.

2.   இந்த டைமுக்கு வேலைக்கு வரவேண்டும் என சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. 24 மணி நேரத்தில் நாம் விரும்பும் நேரம் பணி செய்யலாம், விரும்பும் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். அதுவே இணைய பணியின் சிறப்பு.

3.  நீ இந்த பணியைத்தான் செய்ய வேண்டும் என எவரும் நிர்பந்திப்பதும் இல்லை. தனக்கு பிடித்த தெரிந்த வேலையை செய்யலாம்.

4. மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்ற ஒர் கடிவாளமே கிடையாது. நம் திறமை கொண்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆம், மாதம் ஒர் இலட்சம் கூட சம்பாதித்துக் கொள்ளலாம்.

5. இப்பணிக்காக நாம் ஒன்றும் பெரிய பட்டப்படிப்போ, கணிணிப் படிப்போ படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படை பள்ளிக் கல்வியான 10 ம் வகுப்பு தேர்வு பெற்றிருந்தால் போதும். கூடவே ப்ரவுசிங்க் அறிந்திருந்தால் போதுமானது.

AD CLICKING JOBS (OR) PTC JOBS
பல்வேறு PTC தளங்கள் இருந்த போதும் நம்பகமான தளங்களை மட்டுமே நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.

இந்த PTC தளத்தில் எப்படி சேர்ந்து வேலை செய்வது என்பதை ஒரு தளத்தில் உள்ளவற்றை உங்களுக்கு தெளிவாக இங்கே விளக்கமாக வழங்குகிறோம். இதேபோல் மற்ற தளங்களில் நீங்களே செய்ய முடியும்.

ஏற்கனவே நாங்கள் இதன் மூலம் வருமானம் பெற்றுவருகிறோம். அந்த வருமானச் சான்றும் இங்கே உங்கள் பார்வைக்காக வழங்குகிறோம்.

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் PTC இணையதளங்கள் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல் PTC இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் இந்த தளங்களின் தனி சிறப்பு.


உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.

இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

 PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவராமுதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
·  ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
 எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...·                    
 தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 30 நிமிடங்கள் போதுமானது...
· உங்களுக்கு ஓரளவு தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...


Related Posts Plugin for WordPress, Blogger...