பேபால் இணையவங்கி
(குறிப்பு: இந்த
செய்தி இந்தியர்களுக்கு மட்டுமே ஏற்ற வகையில் சொல்லப்படுகிறது, எனவே,
நீங்கள் வேறு நாட்டவராக இருந்தால் இதனைக் கண்டுக் கொள்ள வேண்டாம்.)
பேப்பாலின் சிறப்பு அம்சம்கள்:
1) மிக மிக நம்பிக்கைக்குரிய, நல்ல பெயர்பெற்ற, மிகச்சிறந்த இணையவங்கி.
2) எல்லா ஆன்லைன் வேலை தளங்களும் இதனை பயன்படுத்துகின்றன.
3)
இணையத்தில் நீங்கள் சீரியஸாக சம்பாதிக்க விரும்பினால், இதில் ஒரு
அக்கவுண்ட் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
4) நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக நம் பேங்க் அக்கவுண்டில் பேபால் வழியாக இந்திய ரூபாயாகவே எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியர்களுக்கான தேவைகள்:
1) கண்டிப்பாக இதில் இணைய பேன் கார்டு தேவை.
(இன்று
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்திய அரசாங்கம் பேன் கார்டு
என்ற அடையாள அட்டையை வழங்கி வருகிறது, உங்களிடம் இல்லையெனில் எளிதாக
வாங்கிக் கொள்ளலாம், இதற்கு 100/200 ரூபாய் செலவாகும்)
2) கண்டிப்பாக ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
இந்தியர்களுக்கான வருத்தமான செய்திகள்:
1) பேன்கார்டு, வங்கி கணக்கு இல்லாவிட்டால் இதில் அக்கவுண்ட் வைத்திருக்க முடியாது.
2)
பேப்பாலில் இந்தியர்கள் பணத்தை சேமித்து வைக்க முடியாது. நீங்கள் ஆன்லைன்
இணைய தளத்தில் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரும் ஏழு நாட்களுக்குள் உங்கள்
பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பப்பட்டுவிடும்.
3) உங்கள் பேப்பால்
கணக்கில் உள்ள பணத்தை இணையத்தில் செலவழிக்க முடியாது, உங்கள் பேங்க்
அக்கவுண்டிற்கு மட்டும் தான் எடுக்க முடியும், பேப்பாலே டாலர்களை இந்திய
ரூபாயாக மாற்றி அனுப்பிவிடும்.
4) எனவே, இணையத்திலேயே நாம்
சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து நியோபக்ஸ் போன்ற தளங்களில் முதலீடு
செய்யும் வாய்ப்பை நாம் இழக்கிறோம்.
5) பேபால் இந்திய ரூபாயாக
மாற்றி அனுப்பி வைப்பதற்காக நம்மிடம் கமிஷன் வசூலிக்கிறது, அதாவது அனுப்ப
வேண்டியது 100 ரூபாய் என்றால் நமக்கு 98 ரூபாய் தான் அனுப்பும்.
பின்பு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
பேசா
போன்ற இணையவங்கிகளைப் போல பேப்பால் அல்ல. பேசா போன்றவை இன்னும் பேப்பாலைப்
போல ஒரு சிறப்பான சேவையை வழங்க முடியாமல் திணறி வருகின்றன. உதாரணத்திற்கு
அமெரிக்கா பயன்பாட்டார்கள் தற்போது பேசாவைப் பயன்படுத்துவதில் பெரிய
சிக்கல் நீடித்து வருகிறது, ஏனெனில் பேசா இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு
செயல்படுகிறது, அமெரிக்காவில் உள்ள தன் பயனாளர்களுக்கு சேவைகளை நேரடியாகச்
செய்யும் லைசண்ஸ் பேசாவிடம் இல்லை, எனவே ஈகோபே என்ற அமெரிக்க நிறுவனத்திடம்
ஒப்பந்தம் கையெழுத்திட்டு அவர்கள் வழியாக அங்கே தன் சேவையை வழங்கி வந்தது,
எப்படியெனில் ஒரு அமெரிக்க பயனாளாருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், பேசா
அதற்கான தகவலையும் பணத்தையும் ஈகோபேவிற்கு அனுப்பும், ஈகோபே அந்த
பயனாளருக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த ஓராண்டாக பேசாவிற்கும்
ஈகோபேவிற்கும் தகராறு. எனவே, ஈகோபே தன் உதவியை தர மறுத்துவிட்டது. இதனால்
பேசாவால் அமெரிக்க பயனாளர்களுக்கு எந்த சேவையும் வழங்க முடியவில்லை.
அமெரிக்க
பயனாளர்கள் தங்கள் பணத்தை அனுப்பச் சொல்லி பேசாவைத் துரிதப்படுத்த அது
என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறது. அமரிக்காவில் தனது புதிய
ஏஜென்ட்டை ஸ்தாபிக்கும் வேலையைச் செய்து வருவதாகவும், அதுவரை
பொறுக்குமாறும் தன் அமெரிக்க பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது, இதனால்
அவர்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள். அரசாங்க வேலைகள் என்றாலே ஆமை போல
நகரும் என்பது நாம் அறிந்ததே, இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அதனால்
மிகவும் கால தாமதமாகி வருகிறது. இணையத்தில் ஆன்லைன் வேலைகளைச்
வழங்குகின்ற/செய்கின்ற மக்களில் முதலிடம் வகிப்பவர்கள் அமெரிக்கர்கள் தான்.
அவர்களால் இப்போது பேசாவைப் பயன்படுத்த முடியவில்லை, அமெரிக்கர்களுக்கு
ஏற்பட்ட இந்த பாதிப்பு ஆன்லைனில் வேலை புரியும் முழு உலக மக்களையும்
பாதித்துவிட்டது, எப்படியெனில் நியோபக்ஸிற்கு அடுத்தப்படி சிறந்த தளம்
கிளிக்சென்ஸ் என முதல் பக்கத்திலேயே படித்திருப்பீர்கள். கிளிக்சென்ஸ்
அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது. அமெரிக்கர்கள் பேசா சேவையைப்
பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கிளிக்சென்ஸ் இனி தன் வாடிக்கையாளர்கள்
பேசா வழியாக சம்பளம் பெற முடியாது, அதற்கு பதிலாக பேப்பாலை
பயன்படுத்துங்கள் என சொல்லிவிட்டது! இது போல அமெரிக்காவில் செயல்படும் பல
தளங்கள் சொல்லிவிட்டன. இதனால் இணையம் வழியாக சம்பாதிப்பவர்களுக்கு பெரிய
பாதிப்பு, குறிப்பாக இந்தியர்களுக்குத் தான்!
எனவே, நாம் ஒரு பேபால்
அக்கவுண்டையும் கொண்டிருப்பது நல்லது. பேபால் தன் சேவையில் இவ்வாறு இதுவரை
திணறவே இல்லை. மிகவும் நன்றாக பத்து ஆண்டுகளுக்கு மேலாய் செயல்பட்டு
வருகிறது, நமக்கு நிம்மதியான, நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு இணையவங்கி
என்றால் அது பேபால் தான். ஆனால் இன்னொரு சோகக் கதையைக் கேளுங்கள்.
இந்தியர்கள் கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு நாட்டை சீரழித்து வருவது நாம்
அறிந்ததே, அந்த கருப்பு ஆடுகளை முடக்க, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேபால்
இந்தியாவில் இயங்க ஏகப்பட்ட விதிகளை விதித்துள்ளது!
பேப்பாலுக்கு
ரிசர்வ் பேங்க் கொடுத்த விதிகள் என்னவென்றால், இந்தியர்களின் பேப்பால்
அக்கவுண்ட்களில் பணமே இருக்கக் கூடாது, அவர்களது பேபால் அக்கவுண்டிற்கு
பணம் வந்தால் உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும்,
இந்தியர்கள் பேப்பாலில் பேலன்ஸ் சேர்த்து வைக்கவோ, டெப்பாசிட் செய்யவோ,
அதனைப் பயன்படுத்தி இணையத்திலேயே ஷாப்பிங் செய்யவோ பேப்பால் அனுமதிக்கவே
கூடாது! இதனால் கருப்பு ஆடுகளோடு சேர்ந்து நம்மைப் போன்ற உழைக்கும்
வெள்ளாடுகளும் பாதிக்கப்பட்டு விட்டோம், கால கொடுமை! எனவே, நீங்கள்
ஆன்லைனில் ஒரு தளத்தில் சம்பாதித்து உங்கள் பேப்பால் அக்கவுண்டிற்கு
அனுப்பினால் உடனடியாக அதனை உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பும்
வேலையில் பேப்பால் ஈடுபட துவங்கும், ஏழு நாளைக்குள் அனுப்பியே தீர
வேண்டும் என்பது ரிசர்வ் பேங்கின் உத்தரவு. அதற்கு பயந்துக் கொண்டு பேபால்
உடனடியாக அனுப்பிவிடுகிறது. பணம் உடனடியாக வருவது நல்ல விஷயம் தான், ஆனால்
நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை பேப்பாலில் சேர்த்து வைத்து நியோபக்ஸ்
போன்ற தளங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை இழக்கிறோமே!
நீங்கள்
நினைக்கலாம், அதற்குத் தான் பேசா இருக்கிறதே என்று. ஆனால் மேலே பேசா
சந்தித்து வரும் சிக்கல்களைப் படித்திருப்பீர்கள். இவ்வாறு திணறி வரும்
இணையவங்கியை விட பேபால் மேலானதே. நல்ல அனுபவமிக்க, 100% நம்பிக்கைக்குரிய
அற்புதமான இணையவங்கி பேப்பால். இந்தியர்களாகிய நமக்குத் தான் அதன் சேவைகளை
முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை!
இந்த செய்தி உங்களுக்கு
பேப்பால் இணையவங்கியின் முக்கியத்துவத்தை தெரியபடுத்தவே. நீங்கள்
இணையத்தில் சம்பாதித்த பணத்தை உடனடியாகப் பெற விரும்பினால் பேப்பாலில் ஒரு
அக்கவுண்ட் வைத்திருங்கள். தேவையான நேரத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை
வேலைவாய்ப்பு தளத்தில் இருந்து உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு மாற்றினால்,
அதிலிருந்து உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு இந்திய ரூபாயாகவே
வந்துவிடும்.
பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது?
1) முதலில்
www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லவும்.
2) Sign up என்ற பட்டனை அழுத்தவும். பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.
3) அதில் India என தேர்வு செய்து, An account for individuals என்ற தலைப்பின் கீழுள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.
4) பின்பு தோன்றுகிற படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
- Email address: உங்கள் ஈமெயில் முகவரி
- Choose a password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
- Re-enter password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
- First name: உங்கள் பேன்கார்டில் உள்ள முதற்பெயர்
- Middle name: உங்கள் பெயரில் இரண்டாவது சொல் இருந்தால் இதில் தெரிவிக்கவும்.
- Last name: தங்கள் பேன்கார்டில் உள்ள தந்தை / கணவன் பெயர்
- Date of birth: பிறந்த நாள்
- Nationality: இந்தியா
- Address line 1: முகவரி
- Address line 2: முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம்.
- Town/City: உங்கள் ஊர்
- State: உங்கள் மாநிலம்
- PIN code: உங்கள் பின் கோடு
- Mobile Number: உங்கள் மொபைல் நம்பர்
எல்லாம் முடிந்த பிறகு, படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேபால் கணக்கு ரெடி.
அதன்
பின்பு, நீங்கள் விரும்பினால் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம்
என ஒரு செய்தி வரும். அதெல்லாம் தேவையில்லை, அச்செய்தியின் கீழுள்ள Go to
My Account என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது உங்கள் பேப்பால்
கணக்கு தோன்றும். அதன் இடப்பக்கத்தில் உள்ள "Confirm Identity" என்ற
தொடுப்பைச் சொடுக்கவும். அதில் உங்கள் பேன் கார்டு, பேங்க் அக்கவுண்ட்
தகவல்களைச் சமர்பிக்கலாம்.
வழிமுறைகள்:
பேன்கார்டு ஆப்ஷனைக்
சொடுக்கி, உங்கள் பேன் எண்ணை சமர்ப்பிக்கவும். அதன் பின்பு, உங்கள் ஈமெயிலை
நிருபிக்க வேண்டும், அதற்காக உங்கள் ஈமெயிலிற்கு பேபால் ஒரு மெயில்
அனுப்பியிருக்கும், அதைக் திறந்து அதிலுள்ள "confirmation link"-ஐ கிளிக்
செய்தால் ஈமெயில் நிருபனமாகிவிடும். மூன்றாவதாக, Purpose code என்ற ஆப்ஷனை
சொடுக்கி, "Freelance journalism" என்ற தேர்வை செலக்ட் செய்து
சமர்பியுங்கள்.
இறுதியாக, பேன்க் அக்கவுண்டை இணைக்க வேண்டும்,
அதற்கான படிவத்தில் கணக்கு பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் மூன்று
தகவல்களையும் சமர்பிக்க வேண்டும், ஐ.எப்.எஸ்.சி எண் என்பது இந்தியாவில்
உள்ள ஒவ்வொரு பேங்கிற்கும் உள்ள தனிப்பட்ட அடையாள எண், உங்கள் பேங்கின்
ஐ.எப்.எஸ்.சி எண் தெரியாவிட்டால், பேபாலிலேயே அதனைத் தெரிந்துக் கொள்ளலாம்,
ஐ.எப்.எஸ்.சி எண் தெரியுமா என்ற தலைப்பின் கீழ், "No" என்று தேர்வு
செய்யவும், பின்பு, பேன்க் பெயர், மாநிலம், ஊர், கிளை என வரிசையாக
தேர்ந்தெடுத்தால் பேபாலே உங்கள் வங்கியின் ஐ.எப்.எஸ்.சி எண்ணைக் காட்டும்.
எல்லாம் முடிந்த பின், கணக்கு பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் ஆகிய
மூன்றையும் சரியாக பூர்த்தி செய்துள்ளீர்களா என பலமுறை சரிபார்க்கவும்.
இறுதியாக படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேன்க் அக்கவுண்டிற்கு பேபாலில்
இருந்து ஓரிரு நாட்களில் இரண்டு சிறு தொகைகள் அனுப்பப்படும், எனவே, ஒரு
ஐந்து நாட்கள் கழித்து எதாவது சிறிய அளவில் பணம் வந்திருக்கிறதா என
ஏ.டி.எமில் செக் செய்து பாருங்கள், வந்திருந்தால் எவ்வளவு வந்திருக்கிறது
என குறித்து வைத்துக் கொள்ளவும். பின்பு, உங்கள் பேபால் கணக்கை லாகின்
செய்து, அதனை தெரிவித்தால் உங்கள் பேன்க் அக்கவுண்ட் பேபாலோடு
இணைந்துவிடும். இனி, நீங்கள் தாராளமாக பேபாலை உபயோகிக்கலாம். நீங்கள்
உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு ஆன்லைனில் சம்பாதித்த பணத்தை மாற்றினால்,
உடனடியாக உங்கள் பேன்க் அக்கவுண்டிற்கு வந்துவிடும். இப்படி நாம் ஆன்லைனில்
சம்பாதிக்கும் பணத்தை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
பேபாலில் பேன்
எண், பேங்க் கணக்கு எண் போன்றவற்றைத் தெரிவிப்பது பாதுகாப்பா? பேபால்
நற்பெயர் பெற்ற இணையவங்கி. நமக்கு அச்சம் தேவையில்லை. பேன் எண்ணையும்,
பேங்க் கணக்கு எண்ணையும் பேபால் கேட்பது கூட அதற்காக அல்ல, ரிசர்வ் வங்கி
பேபாலிற்கு இட்ட உத்தரவினால் தான் கேட்கிறது. இந்திய பயனாளர்கள் இவைகளை
எல்லாம் சமர்பித்தாலே பேபாலை உபயோகிக்க விட வேண்டும் என ரிசர்வ் வங்கி
பேபாலிற்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு, பேன்க் கணக்கு எண், கணக்கு பெயர்,
ஐ.எப்.எஸ்.சி எண்ணை நாம் தெரிவிப்பது பிரட்சனை அல்ல, ஏனெனில் இவைகளை பேபால்
தெரிந்து கொள்வதால் நம் அக்கவுண்டிற்கு பணம் அனுப்ப மட்டுமே முடியும்,
வேறெதுவும் செய்ய முடியாது. யாராயிருந்தாலும் சரி, ஒருவர் நமக்கு பேங்க்
வழியாக பணம் அனுப்ப வேண்டும் என்றால் இந்த மூன்று குறிப்புகளை நாம் தந்தால்
ஒழிய அவரால் நமக்கு பணம் அனுப்ப முடியாது. எனவே, நாம் ஆன்லைனில்
சம்பாதித்த பணத்தை பேபாலிற்கு மாற்றியவுடன், அது நமக்கு அனுப்ப வேண்டும்
என்றால் இத்தகவல்களைத் தராமல் அதெப்படி அனுப்ப முடியும்? அதற்காகத் தான்
கேட்கிறது, மற்றபடி ஒன்றும் அல்ல.
இணையத்தில் சம்பாதிப்பது என்றால்
இதெல்லாம் கற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சம்பாதிப்பது முதல் சம்பளம்
பெறுவது வரை எல்லாம் இன்டர்நெடிலேயே தான். உங்களிடம் பேன் கார்டு, பேன்க்
அக்கவுண்ட் இல்லை என்றால் முதல் பக்கத்தில் உள்ள பேசா இணையவங்கியையே
பயன்படுத்துங்கள். ஆனால் நினைவில் கொள்ளவும், பேசாவிலும் பணத்தை வெளியே
எடுக்க வேண்டுமானால், இந்தியர்களுக்கு உள்ள ஒரே வழி பேங்க் அக்கவுண்ட்
மட்டும் தான். ஆனால் பேபாலைப் போல அல்லாமல், பேசாவில் நீங்கள் சேர்த்து
வைத்த பணத்தை இன்டர்நெடிலேயே வெப்சைட் வாங்குவது, ரெபிரல் வாங்குவது,
கோல்டன் உறுப்பினர் உரிமம் வாங்குவது என செலவழிக்கலாம்.
பேபாலின்
முக்கியத்துவம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும், குறிப்புகள்.காம்
உங்களுக்கு இந்த தகவல்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லித் தரவே. படித்த
இல்லத்தரசிகளுக்கும், வேலையில்லா மாணவர்களுக்கும் இணையத்தில் எப்படி பணம்
சம்பாதிக்கலாம் என ஒரு வழிகாட்டியாக இத்தளம் வடிவமைக்கப்படுகிறது.
இங்குள்ளவை குறிப்புகள் மட்டும் தான், திட்டமிடுவது, செயல்படுவது, வெற்றி
பெறுவது, முன்னேறுவது உங்கள் கைகளில் தான்...! வாழ்த்துக்கள்.