share

Sunday, September 20, 2015

அதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தகம் !

ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புத்தங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம் இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது. நம்முடைய நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி? என்று தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம்
பல இணையதளங்கள் பொருள்களை விற்றாலும் பாதுகாப்பான இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவது நல்லது. ‘https’ என்று ஆரம்பிக்கும் இணையதளம் பாதுகாப்பானவை. சில இணையதளங்கள் ‘http’ என்று ஆரம்பித்திருக்கும். அதுபோன்ற இணையதளங்களை தவிர்க்கவும். இதுபோன்ற இணையதளங்கள் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு அதிகம்.

வை-பை
அதேபோல பொது இடங்களிலோ அல்லது இலவசமாகக் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவது நமக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் அதனை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். இவை மூலமும் உங்களது தகவல்கள் திருடுபோகலாம். அதேபோல பயன்படுத்தும் கணிப்பொறியில் சரியான Anti Virus -யை பொறுத்தவும்.

கிரெடிட் கார்ட்
அனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும் ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்பதை மதிப்பிட முடியும். மேலும், குறைந்த தொகையாக இருக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தவும். ஒரு வேளை எதாவது தவறு நடக்கும்பட்சத்தில் குறைந்த நஷ்டம் ஏற்படும்.
அதேபோல ஆன்லைன் வர்த்தகத்துக்கு டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டையே பயன்படுத்தவும். டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது, சமயங்களில் ஆர்டர் முழுமையாகி இருக்காது, ஆனால் பணம் எடுக்கப்பட்டிருக்கும். சில நாட்களுக்குள் வங்கி கணக்கு வந்தாலும், உடனடி செலவுக்கு கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஆனால் கிரெடிட் கார்டில் இந்த பிரச்சினை கிடையாது.

கவனம் தேவை
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, நாம் எங்கேயும் அலையப் போவதில்லை, நம்முடைய நேரம் மிச்சமாகும், பணமும் மிச்சமாகும். மேலும், கார்டு மூலம் பணம் செலுத்துவதால் இவ்வளவு தொகையை செலவழிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பொருட்களை வாங்கிவிடுவோம்.
உளவியல் ரீதியாக பணத்தைக் கையால் தொட்டு புழங்கும்போது எச்சரிக்கையாக இருக்கும் நாம், கார்டு மூலம் செலவழிக்கும் போது அந்த கவனம் இருக்காது. இதனால் தேவையற்ற பொருட்களை அதிகமாக வாங்கிக் குவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தவிர மொபைல் போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை குறைந்த காலத்தில் மாற்றும் வாய்ப்பு இருப்பதால் சுயகட்டுப்பாடு தேவை. இல்லையெனில் ஒவ்வொரு மாதம் வரும் சம்பளத்தை கிரெடிட் கார்டுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும்.

விலை வேறுபாடுகள்
நிறைய இணையதளங்கள் வந்துவிட்டதால் விலைகளை ஒப்பிட்டு பார்த்து வாங்குவதன் மூலம் லாபம் கிடைக்கும். விலையை ஒப்பீடு செய்வதற்கு கூட சில இணையதளங்கள் இருக்கின்றன. அதுபோன்ற இணைய தளங்களுக்கு சென்று முடிவு செய்யலாம்.
சில இணையதளங்கள் கூரியர் கட்டணம் வசூலிப்பார்கள். சில நிறுவனங்கள் இலவசமாக டெலிவரி செய்வார்கள். அதனால் பொருட்களின் விலையை மட்டும் பார்க்காமல், மொத்தமாக எவ்வளவு செலவாகிறது என்பதை பொறுத்து எந்த இணையதளத்தில் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
வாரண்டி உள்ளிட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் நிபந்தனைகளை சரியாக படித்து பாருங்கள். அதாவது, கேஷ் ஆன் டெலிவரி, பொருளை திருப்ப அனுப்புவது, வாரண்டி உள்ளிட்ட விஷயங்களில் என்ன விதிமுறை, பொருட்கள் எப்போது கிடைக்கும் என்பது உள்ளிட்ட விஷயங்களை கவனிக்கவும். மேலும், ஆன்லைன் மூலம் வாங்கியவை சம்பந்தமாக ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

நன்றி :   thehindu.

Monday, September 14, 2015

ரெஸ்யூம் தயாரிப்பு சிறந்த டிப்ஸ் !



ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார். அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.
மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.


உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.
உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.
ரெஸ்யூம் எத்தனை பக்கம்
ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.


தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.


இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,
I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.


முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.


தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,
பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.
உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.
ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.
அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.
கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.


சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.
ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.


தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.


அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------
போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக,
My contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------
போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.


நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில், அதுவே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவற்றை குறிப்பிட தயங்க வேண்டாம். உதாரணமாக,
  • Being punctual
  • Creative
  • Caring for minute details
  • Reliable
  • Following systems and procedure
  • Efficiency minded
  • Cost conscious
  • Waste control
போன்றவற்றை சொல்லலாம்.


முதல் நிலை ஆய்வு

உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.
அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.


இதை செய்யாதீர்கள்

உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர்கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை, எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமில் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.
இன்றைய நிலையில், பணி வழங்குநர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதில்லை. உங்களின் பழைய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.


எழுத்துப் பிழை

ரெஸ்யூம் தயாரான பிறகு, அதை எழுத்துப் பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவது பலரின் வழக்கமான உள்ளது. ஆனால், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெனில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதேநேரத்தில், கணினியும் சில காரணங்களால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்புண்டு.
எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்து விடாமல், ஒரு வரி விடாமல் நீங்களே கவனமாக படிக்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில், மனித மூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டுமொத்த மதிப்பையே அது குலைத்துவிடும்.

சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..




http://www.msmedi-chennai.gov.in/MSME/எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.
யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.
சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு. சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.
மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.
இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்?

டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெறவேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து  உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்

எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.

வங்கிகளுடன் கூட்டு

சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும்  நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்

சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும். இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
எனவே, வேலை கிடைக்கவில்லை என்று ஏங்காமல், சுயதொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் ஆதாரமாக மாறுங்கள் இளைஞர்களே...
ஆதாரம் : தினமணி

Saturday, September 12, 2015

வங்கி சேமிப்பின் வகைகள் !

இந்கிய வங்கித்துறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மகக்ளின் தனிப்பட்ட தேவைகளுக்கு பல வகையான திட்டங்களை வழங்கி வருகின்றனர். வங்கிகளில் வழங்கும் சேமிப்புக் கணக்குகள் வாடிக்கையாளரின் வயது, வருமானம் மற்றும் பாலின அடிப்படையில் பல வங்கிகள் வெவ்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் இத்தகைய கணக்குள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம், ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றாகவே இருக்கும்.மேலும் இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் சில வகையான வங்கிக் கணக்கு வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன

மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு

பெயருக்கு ஏற்றார் போல் மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர் தேவைக்கேற்றார் போல 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கானது. இதில் பல்வேறு நன்மைகள் உள்ளது, அவை நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் (FD) பிரத்யேக வட்டி விகிதம், குறைவான கட்டணங்கள் ஆகியன அடங்கும்.

பெண்கள் சேமிப்பு கணக்கு

பல வங்கிகள் பெண்களின் பொருளாதார தேவை, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்காக பிரத்யேக வங்கிக் கணக்கை வடிவமைத்துள்ளனர். சில வங்கிகள் அதிக பண வரம்பு மற்றும் பணம் திரும்பப் பெரும் சலுகைகள் போன்றவற்றை வழங்குகின்றன.

சாதாரண சேமிப்பு கணக்கு

சாதாரண சேமிப்புக் கணக்கை யாரும் திறக்கலாம். சராசரியாக காலாண்டிற்கு குறைந்த பட்ச தொகையை வைப்பு வைக்க வேண்டும். தவறினால் தண்டனை பணம் வசூலிக்கப்படும். சாதாரண சேமிப்புக் கணக்கில் கணக்குப் புத்தகம், இணைய வங்கி வசதி, தொலைபேசி வங்கி வசதி, காசோலைப் புத்தகம் மற்றும் பற்று அட்டை போன்ற அம்சங்கள் உள்ளன.

கட்டணமில்லாத அடிப்படை வங்கிக் கணக்கு

இந்த வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்த பட்ச வைப்புத் தொகை வரம்பு கொண்டவர்கள் அல்லது வரம்பு அற்றவர்கள். பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்காக ரிசர்வ் வங்கியால் இந்த திட்டம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன அது வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன.

மாணவர் சேமிப்பு கணக்கு

சில வங்கிகள் மட்டுமே மாணவர் சேமிப்பு கணக்கு வசதியினை வழங்குகின்றன. இதில் குறைந்த பட்ச வைப்பு தொகை இருக்காது அல்லது மிகவும் குறைந்தபட்ச தொகை இருந்தால் போதுமானது.
என்.ஆர்.ஐ தொடர்பான கணக்குகள்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய வங்கி அமைப்பில் தனி இடம் உண்டு இவர்களுக்கு தரப்பட்ட வங்கி சேவைகள் வழங்கப்படுகிறது. இதில் சேமிப்பு கணக்குத் திட்டங்கள் உள்ளன. அவைகளை பற்றி பார்போம்.

என்.ஆர்.இ. சேமிப்பு கணக்கு

இந்த கணக்கில் ரூபாய் மதிப்பு வடிவில் பராமரிக்கப்படலாம். இக்கணக்கை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயர்களில் துவங்கலாம்.

என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கு

ரூபாய் மதிப்பு வடிவிலும், நடப்பு கணக்காகவும், சேமிப்பு கணக்காகவும், தொடர் கணக்காகவும், நிரந்தர வைப்பு கணக்காகவும் என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கில் துவங்கவும்/வைக்க முடியும். இந்தியாவில் குடியிருப்பவர்களுடன் கூட்டுக் கணக்காகவும் வைத்துக் கொள்ளலாம். என்.ஆர்.ஒ. கணக்கிற்கு வேறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யலாம், இந்தியாவில் வசிப்பவர்கள் கூட வெளிநாடு வாழ் இந்தியரின் என்.ஆர்.ஒ. கணக்கில் பணம் செலுத்தலாம்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

Sunday, September 6, 2015

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!


இன்றைய கார்ப்ரேட் யுகத்தில், பல தனியார் நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும், உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவராக திகழ்கிறார்  சி.இ.ஓ., (Chief Executive Officer).

ரகசியம் அறியுங்கள்

இந்த பதவியை பிடிக்க இளைஞர்கள் பலருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால், பொறுப்புகள் நிறைந்த, அதிகாரங்கள் குவிந்து கிடக்கும் இப்பதவியை எப்படி அடைவது என்பதை அவர்கள் அறிவார்களா? குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு இதுகுறித்த போதுமான தெளிவு இருக்குமா என்பது சந்தேகமே.
இளம் வயதினரும் இந்த பொறுப்பை அடைய முடியும் என்பதற்கு ‘பேஸ்புக்’ சக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், முதல் எத்தனையோ பேர் உதாரணமாக திகழ்கின்றனர். இளம் வயதினரும் சி.இ.ஓ., ஆக முடியும். அதற்கு இங்கே எந்தவித பயிற்சியும் அளிக்கப்போவதில்லை. சில முக்கிய ரகசியத்தை மட்டுமே சொல்லப்போகிறோம். அவை:

சரியான சூழலை தேர்வு செய்யுங்கள்

பொருத்தமான சூழல் இல்லாத இடத்தை தேர்வு செய்ததாலேயே பலர் தங்களது உண்மையான திறன்களை வெளிக்கொணர முடியாமல் தவிக்கின்றனர். இளம் வயதிலேயே சி.இ.ஓ., ஆவதற்கான முதல்படி, சரியான சூழல் உள்ள நிறுவனத்தில் சேர்வது. அதாவது, வயதிற்கு மரியாதை அளிக்கும் இடம் அல்ல; உழைப்புக்கு மரியாதை கிடைக்கும் இடம்.
உங்களது சுய குறிக்கோள் மற்றும் மதிப்புக்கு ஏற்ப உங்களால் உண்மையாக செயல்பட முடியாத இடத்தில் சாதிப்பது மிக மிக கடினம். எனவே, உங்களது குறிக்கோளை அடைவதற்கு சாத்தியமுள்ள சூழலை தேர்வு செய்வது அவசியம்; மாறாக, உங்களது குறிக்கோள் என்ன என்பதையே மறந்து போகக்கூடிய சூழல் அல்ல.
இளம் சி.இ.ஓ., டேன்னி வாட்டர்ஸ் சொல்கிறார், “நீங்கள் செய்யும் எந்த வேலையையும் ரசித்து, மகிழ்ச்சியாக செய்வது மிக முக்கியம். அப்போது தான், வெற்றிக்கு அது உங்களை அழைத்துச் செல்லும்”.

‘ரிஸ்க்’ எடுக்க தயங்காதீர்கள்

இளம் வயதில் ‘ரிஸ்க்’ எடுப்பதில் பெரியளவில் எதையும் இழக்கப்போவதில்லை என்ற உண்மை நம்மில் பலர் அறிவதில்லை. ஆனால், எதிர்வரும் விளைவுகளை நினைத்து பயந்தே எந்தவித ‘ரிஸ்க்’ எடுக்கவும் தயங்குகிறோம். இளம் தனிநபர் எடுக்கும் எந்த பெரிய ‘ரிஸ்க்’கும் தோல்வியில் முடிந்தாலும், அதனால் பெரிய இழப்பில்லை. ஒருவேளை, விளைவுகள் அதிகமாக இருந்தாலும், அதுவும் ஒருவிதத்தில் நல்லதே.
“தோல்வியின் விளைவுகள் குறைவாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்கு எதையும் எதிர்த்துநிற்கும் திறன் வராது” என்கிறார் இளம் சி.இ.ஓ., ஜோனதன் சாமுவேல்ஸ்.

உங்களை பிறர் மதிக்க செய்யுங்கள்

முன்னேறி நீங்கள் மேலே மேலே செல்ல வேண்டுமானால், உங்களது முடிவுக்கு சக பணியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். வயதில் மூத்தவர்கள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இது மிகக் கடினமானதாக தோன்றலாம்.  எனவே, நீங்கள் செய்யும் வேலைக்கும், உங்களது திறமைக்கும் மதிப்பளிப்பவர்கள் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.
சாமுவேல்ஸ் மேலும் சொல்கிறார், “பிற நிறுவனங்களுடனான வணிக பேச்சுவார்த்தைகளின் போது உங்களது இளம் வயது எதிர்தரப்பினருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், எனது அனுபவத்தில் சொல்கிறேன்... என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து பேசும்போது, அவர்களது ஆச்சரியம் விரைவில் காணாமல்போய்விடும்”.


ஆதாரம்: தினமலர் கல்விமலர்
Related Posts Plugin for WordPress, Blogger...